By Ashokamitran, Compiler: K.Mohanarankan (அசோகமித்திரன், க. மோகனரங்கன்)
By Ashokamitran, Compiler: K.Mohanarankan (அசோகமித்திரன், க. மோகனரங்கன்)
₹2250.00
MRPGenre
Print Length
1648 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2016
ISBN
9789352440146
Weight
220 gram
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.
“பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.
அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர்.
அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.
0
out of 5